செய்திகள்
மொழி விவகாரத்தில் தேவையற்ற அரசியல் நகர்வுகள்: உயர்நீதிமன்ற மதுரை கிளை
உள்ளூர் மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊட்டி ஆயுத தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வில் குளறுபடி என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ‘‘மொழி விவகாரத்தில் தேவையற்ற அரசியல் நகர்வுகள் உள்ளன’’ நீதிபதிகள் தெரிவித்தார்.
மேலும், இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? என தமிழக மின்வாரியத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.