செய்திகள்
தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் மெக்கானிக் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-05 11:25 GMT   |   Update On 2020-10-05 11:25 GMT
வெவ்வேறு சம்பவங்களில் மெக்கானிக் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பம்:

கம்பம் வனத்துறை அலுவலக சாலையை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 35). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். அதன்பின்னர் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சேலையால் தூக்குப்போட்ட நிலையில் கதிர்வேல் பிணமாக தொங்கினார். 

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதிர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம்(56). நெசவு தொழிலாளி. இவருக்கும் மனைவி பாக்கியத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நாகலிங்கம் நேற்று மேக்கிழார்பட்டி ரோட்டில் உள்ள கன்னிமார் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகலிங்கத்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News