செய்திகள்
கைது

சிப்காட் அருகே ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-10-05 06:41 GMT   |   Update On 2020-10-05 06:41 GMT
சிப்காட் அருகே ஏரி மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சிப்காட்டை அடுத்த அவரக்கரை ஏரியில் இருந்து ஆரணி கம்மாளர் தெருவை சேர்ந்த வீரமணி (வயது 28), புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த துளசி (42) ஆகிய இருவரும் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி மண் கடத்தி வந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிப்காட் போலீசார், மண் கடத்திய வீரமணி, துளசி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News