செய்திகள்
திசையன்விளை அருகே சூதாடிய 6 பேர் கைது
திசையன்விளை அருகே சூதாடிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2,850-யை பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீசார் தெற்கு விஜயநாராயணத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த மணி (வயது 57), முத்துபாண்டி (34), செல்லப்பா (36), குத்தாலிங்கம் (30), சங்கனாங்குளத்தைச் சேர்ந்த முருகன் (61) சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த வள்ளிவேல் (52) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.2,850-யை பறிமுதல் செய்தனர்.