செய்திகள்
தற்கொலை

கணவருடன் தகராறு: மகன் பிறந்த நாளில் தாய் தற்கொலை

Published On 2020-10-04 00:45 GMT   |   Update On 2020-10-04 00:45 GMT
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகன் பிறந்த நாளில் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னங்குறிச்சி:

சேலம் ஜட்ஜ் ரோடு அருகில் உள்ள எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கவுரி (வயது 40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் தங்களது மகனின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினார்கள். அதன் பின்னர் இரவு உணவிற்காக ஓட்டலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். 

இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுரி, தனிஅறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் பிறந்த நாளில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News