செய்திகள்
திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் அருகே வேளாண் அவசர சட்டங்களை எதிர்த்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
விவசாயிகளின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பிரமணியன், அன்பழகன், முருகுபாண்டியன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட செயலாளர் தம்பிதுரை நன்றி கூறினார்.