செய்திகள்
கோப்புபடம்

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

Published On 2020-10-01 07:53 GMT   |   Update On 2020-10-01 07:53 GMT
குடவாசல் அருகே விஷம் குடித்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது27). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 23-ந்தேதி வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த ராஜேஷ் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேசின் அண்ணன் மகேந்திரன் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News