செய்திகள்
ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காந்தி எம்.எல்.ஏ. உள்பட 80 பேர் மீது வழக்கு
ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காந்தி எம்.எல்.ஏ. உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், இதற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று முன்தினம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது கூட்டமாக சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காந்தி எம்.எல்.ஏ. உள்பட 80 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.