செய்திகள்
மின்தடை

நாங்குநேரி பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-09-30 08:11 GMT   |   Update On 2020-09-30 08:11 GMT
நாங்குநேரி பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வள்ளியூர்:

நாங்குநேரி வாகைகுளம் ஏ.எம்.எல். துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் நாங்குநேரி வட்டார பகுதியான வாகைகுளம், ராஜாக்கள்மங்கலம், பெருமளஞ்சி கீழுர், மேலூர், திருவேங்கடநாதபுரம், கோவனேரி, ஆச்சியூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News