செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-29 17:06 GMT   |   Update On 2020-09-29 17:09 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனையில் 29 பேர், அரசு மருத்துவமனையில் 41 பேர் என 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 85,997 மாதிரிகளும், 84,163 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 72,67,122 மாதிரிகளும், 70,50,820 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக இருந்தாலும், 5,36,209 பேர் குணமடைந்துள்ளதால் 46,281 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 185
செங்கல்பட்டு - 2,184
சென்னை - 11,193
கோவை - 5,156
கடலூர் - 1,473
தர்மபுரி - 938
திண்டுக்கல் - 489
ஈரோடு - 1100
கள்ளக்குறிச்சி - 437
காஞ்சிபுரம் - 887
கன்னியாகுமரி - 882
கரூர் - 432
கிருஷ்ணகிரி - 847
மதுரை - 742
நாகை - 503
நாமக்கல் - 1059
நீலகிரி - 953
பெரம்பலூர் - 138
புதுக்கோட்டை - 723
ராமநாதபுரம் - 150
ராணிப்பேட்டை - 441
சேலம் - 2764
சிவகங்கை - 261
தென்காசி - 447
தஞ்சாவூர் - 1282
தேனி - 538
திருப்பத்தூர் - 535
திருவள்ளூர் - 1621
திருவண்ணாமலை - 963
திருவாரூர் - 1011
தூத்துக்குடி - 563
திருநெல்வேலி - 882
திருப்பூர் - 1583
திருச்சி - 779
வேலூர் - 857
விழுப்புரம் - 964
விருதுநகர் - 299
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 2
உள்நாடு - 16
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,281
Tags:    

Similar News