செய்திகள்
மரணம்

மேட்டூர் அணையில் மூழ்கி சென்னை என்ஜினீயர் பலி

Published On 2020-09-29 07:21 GMT   |   Update On 2020-09-29 07:21 GMT
மேட்டூர் அணையில் மூழ்கி சென்னை என்ஜினீயர் உயிரிழந்தது தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேட்டூர்:

சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் மதியரசன். இவரது மகன் பிரஷாந்த் (வயது 25).

இவர் மேட்டூரில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் பணிமுடித்த இவர் நண்பர்களுடன் சேர்ந்து மேட்டூர் அணையில் திப்பம்பட்டி பகுதியில் குளித்தார். அப்போது நீச்சல் தெரியாத இவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நண்பர்கள் கதறினர். இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் கதறியபடி சேலத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News