செய்திகள்
மரணம்

செல்போன் பேசியபடி நடந்து சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி

Published On 2020-09-28 10:16 GMT   |   Update On 2020-09-28 10:16 GMT
ஆம்பூர் அருகே செல்போன் பேசியபடி நடந்து சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவருடைய மனைவி லக்‌ஷனா (வயது 21). இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ½ ஆண்டுகளில் லக்‌ஷனா இறந்ததால், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News