செய்திகள்
கோப்புபடம்

முக கவசம் அணியாத 17 பேருக்கு அபராதம்

Published On 2020-09-28 07:55 GMT   |   Update On 2020-09-28 07:55 GMT
பாபநாசம் அருகே இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சி பகுதியில் உதவி செயற்பொறியாளர் மாதவன் தலைமையில் செயல் அதிகாரி கார்த்திகேயன், செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளர் மருதமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் நாடிமுத்து ஆகியோர் பாபநாசம் புதிய பஸ் நிலையம், கடை வீதி, தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். 

அப்போது இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பாபநாசம் பகுதியில் பாலித்தீன் பைகள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News