செய்திகள்
செஞ்சி அருகே அண்ணனை உயிரோடு எரிக்க முயன்ற விவசாயி கைது
செஞ்சி அருகே அண்ணனை உயிரோடு எரிக்க முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
செஞ்சியை அடுத்த கோணை மதுரா சோமசமுத்திரத்தை சேர்ந்தவர்கள் ஜெயராமன் மகன்கள் செந்தில்குமார் (வயது 50). பாலகுமார் (49). விவசாயிகளான இவர்களுக்குள் நிலபிரச்சினை காரணமாக, முன்விரோதம் உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாலகுமார், தவச்செல்வி ஆகியோர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகுமாரை கைது செய்தார்.
செஞ்சியை அடுத்த கோணை மதுரா சோமசமுத்திரத்தை சேர்ந்தவர்கள் ஜெயராமன் மகன்கள் செந்தில்குமார் (வயது 50). பாலகுமார் (49). விவசாயிகளான இவர்களுக்குள் நிலபிரச்சினை காரணமாக, முன்விரோதம் உள்ளது.
சம்பவத்தன்று நரசிங்கராயன் பேட்டையில் உள்ள செந்தில்குமார் வீட்டுக்கு பாலகுமார், அவரது மனைவி தவச்செல்வி ஆகியோர் வந்தனர். அப்போது அங்கிருந்த செந்தில்குமாரை அவர்கள் தடியால் தாக்கி, மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு கொளுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதில், அவர்களிடமிருந்து செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்றும், பாலகுமார் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.