செய்திகள்
விபத்து பலி

பெதப்பம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2020-09-23 12:27 GMT   |   Update On 2020-09-23 12:27 GMT
பெதப்பம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிமங்கலம்:

குடிமங்கலம் அருகே உள்ள சோமவாரபட்டியைச் சேர்ந்தவர் கருவண்டராயன் (வயது 38) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் மோட்டார்சைக்கிளில் பெதப்பம்பட்டியிலிருந்து அடிவள்ளியில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கொங்கல் நகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகனம் ஒன்று கருவண்டராயன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருவண்டராயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News