செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னை போலீசில் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-23 02:35 GMT   |   Update On 2020-09-23 02:35 GMT
சென்னை போலீசில் நேற்று இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 8 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
சென்னை:

சென்னை போலீசில் நேற்று இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 8 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,431 ஆக உயர்ந்தது.

தீவிர சிகிச்சை பலனாக நேற்று ஒரே நாளில் அயனாவரம் உதவி கமிஷனர் சீனிவாசன் உள்பட 19 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதைத்தொடர்ந்து சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,184 ஆக அதிகரித்தது. சென்னை போலீசில் கொரோனா பாதிப்பை விட, குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
Tags:    

Similar News