செய்திகள்
கொரோனா பரிசோதனை

பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-22 13:42 GMT   |   Update On 2020-09-22 13:42 GMT
பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேட்டூர்:

பி.என்.பட்டி பேரூராட்சி, கோம்பூரான் காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனை முகாமை பேரூராட்சிக்கு உட்பட்ட தேசாய் நகர் மற்றும் தேங்கல்வாரை ஆகிய பகுதிகளில் நடத்தியது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி செந்தில் குமரன் தலைமை தாங்கினார். டாக்டர் ராமமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் பேரூராட்சி சார்பில் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News