செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி
ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமூக்கனூர் அருகே உள்ள கர்ணன் வட்டத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67). இவரது மனைவி வித்யா (வயது 52). இந்த நிலையில் நேற்று முன்தினம் வித்யாவை பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே வித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.