செய்திகள்
காங்கிரஸ்

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2020-09-21 07:14 GMT   |   Update On 2020-09-21 07:14 GMT
சிவகாசியில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு பட்டதாரி காங்கிரஸ் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
சிவகாசி:

பட்டதாரி காங்கிரஸ் அமைப்பின் மாநில பொதுசெயலாளர் மைக்கேல், விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகாசியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கந்துவட்டி பிரச்சினை தற்போது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்ப தேவைக்கு சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்லாததால் உரிய வருமானம் இல்லாமல் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

சிவகாசி பகுதியில் உள்ள பல தொழிலாளர்கள் கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபோன்ற கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தவிக்கும் ஏழை மக்களை காப்பாற்ற விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சிவகாசியில் ஒரு சிறப்பு முகாமை நடத்தி கந்துவட்டி கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட போலீஸ் நிர்வாகம் கந்து வட்டி கும்பலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News