செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மதுரையில் 86 பேருக்கு கொரோனா - மூதாட்டி உயிரிழப்பு- ஒரே நாளில் 135 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2020-09-21 00:53 GMT   |   Update On 2020-09-21 00:53 GMT
மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 75 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 100 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 710 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பில் யாரும் உயிரிழக்காத நிலையில் நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை 378 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News