செய்திகள்
கோப்புபடம்

பொங்கலூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Published On 2020-09-17 13:06 GMT   |   Update On 2020-09-17 13:06 GMT
பொங்கலூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொங்கலூர்:

பொங்கலூர் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). இவரது மனைவி தனலட்சுமி (50). இவர்களது மகள் வேலுமணிக்கு (25) கடந்த சில வருடங்களுக்கு முன்பு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் நடைபெறுவது கால தாமதம் ஆகி வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் ஊரின் அருகே உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News