செய்திகள்
மீனவர் பலி

கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2020-09-17 08:27 GMT   |   Update On 2020-09-17 08:27 GMT
கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலியான மீனவர் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராதாபுரம்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் பகுதியை சேர்ந்த இனிகோ, ராபர்ட், சந்தியாகு ராயப்பன், மிக்கேல் (வயது 50) ஆகிய 4 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காக நாட்டுப் படகில் கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென்று ஒரு ராட்சத அலை தோன்றியது. இதில் மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு தலைக்குப்புற கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.

இதைப்பார்த்த மற்றொரு படகில் வந்த மீனவர்கள் 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மிக்கேல் மயக்க நிலையில் இருந்ததால் லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உள்ளிட்ட காவல்படையினர் வந்து பலியான மிக்கேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News