செய்திகள்
விபத்து பலி

வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2020-09-16 11:34 GMT   |   Update On 2020-09-16 11:34 GMT
வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இருதயநாதன் (வயது 60). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிள், இருதயநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருதயநாதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விபத்துக்கு காரணமான ஆசாமியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News