செய்திகள்
துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’- நாளை மறுதினம் முதல் பதிவிறக்கம் செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’நாளை மறுதினம் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வருகிற 15-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல், கடந்த 26-3-2020 அன்று ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வருகிற 15-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல், கடந்த 26-3-2020 அன்று ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.