செய்திகள்
கோப்புபடம்

லால்குடியில் மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் பலி - காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்

Published On 2020-09-12 11:04 GMT   |   Update On 2020-09-12 11:04 GMT
லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு எஸ்வந்த் என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக சதீஷ்குமார் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை திறந்தார். அப்போது, அதில் கட்டியிருந்த மின்வயரில் இருந்து மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற சுஜிதா மீதும் மின்சாரம் பாய்ந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுஜிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News