செய்திகள்
கோப்புபடம்

ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேர் கைது

Published On 2020-09-11 11:00 GMT   |   Update On 2020-09-11 11:00 GMT
ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று மேல்சீசமங்கலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வரசு (வயது 35), விஜய் (25), சிரஞ்சீவி (27), வள்ளிக்கண்ணன் (36) ஆகிய 4 பேர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் வந்த ஏழுமலை மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 5 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஏழுமலையை தேடி வருகின்றனர்.

மேலும் லாடவரம் மயானப்பகுதி அருகே மாமண்டூரை சேர்ந்த வெங்கடேசன் (50), லாடப்பாடியை சேர்ந்த ரவிசங்கர் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News