செய்திகள்
வாங்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
வாங்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேற்கூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி (வயது 58), ரமேஷ் (58), ராஜா (56), சேகர் (52), காளியப்பன் (43), சந்துரு (41), சண்முகம் (48), நாராயணன் (54) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.15ஆயிரத்து 460-ஐ பறிமுதல் செய்தனர்.