செய்திகள்
சிறுவன் பலி

கோவில் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

Published On 2020-08-29 07:02 GMT   |   Update On 2020-08-29 07:02 GMT
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி வாணி. இவர்களது 5 வயது மகன் சாய் ஹரிகிருஷ்ணா.

நேற்று காலை அவர்கள் திருவள்ளூர் அருகே உள்ள முதுகூர் கிராமத்தில் இருக்கும் கன்னியம்மன் கோவிலில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.

அனைவரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது சிறுவன் சாய் ஹரிகிருஷ்ணா திடீரென மாயமானான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி மற்றும் உறவினர்கள் அவனை தேடினர். அப்போது கோவில் அருகே உள்ள குளத்தில் சாய் ஹரிகிருஷ்ணா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவன் விளையாட சென்றபோது கோவில் குளத்திற்குள் தவறி விழுந்து இறந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுவன் சாய் ஹரிகிருஷ்ணாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது கோவில் குளத்தில் மூழ்கி மகன் இறந்த சம்பவம் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News