செய்திகள்
2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2-வது நாளாக நேற்றும் இப்போராட்டம் தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் 360 ஊழியர்களும், 140 பஞ்சாயத்து செயலர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபாதிப்பு ஏற்பட்டது.