செய்திகள்
கைது

சேவூரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2020-08-27 09:21 GMT   |   Update On 2020-08-27 09:21 GMT
சேவூரில் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேவூர்:

சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சேவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, தனி பிரிவு போலீஸ் வெள்ளியங்கிரி ஆகியோர் அந்தப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்ற பந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 40), கவின் (26), பெரியசாமி (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News