செய்திகள்
சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைப்பு
பாபநாசம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் தாசில்தார் கண்ணன் திருக்கருகாவூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டமாக நின்று ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.