செய்திகள்
சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் மாயம்
சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை (வியாழக்கிழமை) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து வைத்து உள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென்று மாயமானார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.