செய்திகள்
சென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 7,433 இ-பாஸ் வினியோகம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கும் நேற்று 7,433 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கும் நேற்று 7,433 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை 4.45 மணி வரை 7,433 இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்களுக்காக 956 பாஸ்களும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு 2,040 பாஸ்களும், இறப்புகளுக்காக 141 பாஸ்களும், திருமணங்களுக்காக 850 பாஸ்களும், அரசு டெண்டர் தொடர்பான காரணங்களுக்கு 24 பாஸ்களும், அரசு வேலை தொடர்பாக வருபவர்களுக்கு 63 பாஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன.
இதேபோல் பத்திரப்பதிவு உள்ளிட்ட வேலைகளுக்காக 2,380 பாஸ்களும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மற்றும் ரெயில் மூலம் வருவதற்கு 763 பாஸ்களும், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விமானம் மற்றும் ரெயில் மூலம் வர 216 பாஸ்களும் என மொத்தம் 7,433 இ-பாஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கும் நேற்று 7,433 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை 4.45 மணி வரை 7,433 இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்களுக்காக 956 பாஸ்களும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு 2,040 பாஸ்களும், இறப்புகளுக்காக 141 பாஸ்களும், திருமணங்களுக்காக 850 பாஸ்களும், அரசு டெண்டர் தொடர்பான காரணங்களுக்கு 24 பாஸ்களும், அரசு வேலை தொடர்பாக வருபவர்களுக்கு 63 பாஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன.
இதேபோல் பத்திரப்பதிவு உள்ளிட்ட வேலைகளுக்காக 2,380 பாஸ்களும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மற்றும் ரெயில் மூலம் வருவதற்கு 763 பாஸ்களும், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விமானம் மற்றும் ரெயில் மூலம் வர 216 பாஸ்களும் என மொத்தம் 7,433 இ-பாஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.