செய்திகள்
கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

Published On 2020-08-15 13:54 GMT   |   Update On 2020-08-15 13:54 GMT
எரியோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

எரியோடு பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எரியோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது எரியோடு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மலைப்பட்டி ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி (42), கோவிலூர் தோப்புப்பட்டியை சேர்ந்த பழனி (60), காத்தப்பன் (35), ராமர்(40) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News