செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

எஸ்.பி.பி. உடல்நலம் குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-08-15 13:24 GMT   |   Update On 2020-08-15 13:24 GMT
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு மருத்துவர்களிடம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ள நிலையில் அவ்வப்போது நினைவும் வந்து செல்கிறது. 48 மணி நேரமாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News