செய்திகள்
வாலிபர் கைது

சூலூரில் தொடர் திருட்டு- வாலிபர் கைது

Published On 2020-08-14 12:52 GMT   |   Update On 2020-08-14 12:52 GMT
சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்:

சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை குறிவைத்து தொடர் திருட்டுகள் அரங்கேறின. இதுகுறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாராபுரம் கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் ஜேம்ஸ் (வயது 26) திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் மீது திருப்பூர் பகுதியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 லேப்டாப்கள், 10 செல்போன்கள், கணினி உதிரி பாகங்கள் உட்பட மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News