செய்திகள்
திருமணத்திற்கு தாமதம் செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே கர்ப்பிணியாக்கிவிட்டு, திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலனும் தூக்கில் தொங்கி உயிரைவிட்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சோதியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது மகள் சித்ரா (வயது 17). வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் வேலு (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வேலு சித்ராவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதில் சித்ரா 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, வேலுவிடம் பலமுறை கேட்டும் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சித்ரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் தாயார் விஜயா தனது மகள் சாவுக்கு காரணமான வேலு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தூசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த வேலு நேற்று காலை தென்னாங்கூரில் உள்ள தனது வீட்டின் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சோதியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது மகள் சித்ரா (வயது 17). வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் வேலு (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வேலு சித்ராவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதில் சித்ரா 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, வேலுவிடம் பலமுறை கேட்டும் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சித்ரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் தாயார் விஜயா தனது மகள் சாவுக்கு காரணமான வேலு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தூசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த வேலு நேற்று காலை தென்னாங்கூரில் உள்ள தனது வீட்டின் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.