செய்திகள்
ராமநாதபுரம் - சிவகங்கையில் மேலும் 78 பேருக்கு தொற்று
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,585 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,646 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 150 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 135 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்புவனத்தை சேர்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,585 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,646 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 150 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 135 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்புவனத்தை சேர்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.