செய்திகள்
கோப்புபடம்

காதலித்த பெண் பலி - விஷம் குடித்து மாணவர் தற்கொலை

Published On 2020-08-06 15:35 GMT   |   Update On 2020-08-06 15:35 GMT
மொரப்பூர் அருகே காதலித்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் மாணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:

மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்வா(வயது 21). என்ஜினீயரிங் படிக்கும் மாணவரான இவர், அதே பகுதியை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் அந்த பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் மனமுடைந்த விஷ்வா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா உயிரிழந்தார். இதுதொடர்பாக மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News