செய்திகள்
குன்றத்தூர் எஸ்எஸ்ஐ பாண்டி முரளி

குன்றத்தூர் எஸ்.எஸ்.ஐ. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Published On 2020-08-06 02:56 GMT   |   Update On 2020-08-06 02:56 GMT
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முரளி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை:

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அடுத்த குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முரளி கொரோனா பாதிப்பு காரணமாக நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags:    

Similar News