செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் பலி

Published On 2020-08-04 13:13 GMT   |   Update On 2020-08-04 13:13 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2-வது நாளாக பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் 25 பேரும், அரசு மருத்துவமனையில் 83 பேரும் என மொத்தம் 108 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தம் 4,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 55,122 மாதிரிகளும், 52,955 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28,92,395 மாதிரிகளும், 27,86,250 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News