செய்திகள்
மருத்துவ முகாம்

கலவை தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

Published On 2020-08-01 07:06 GMT   |   Update On 2020-08-01 07:06 GMT
கலவை தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கலவை:

கலவை தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. தாசில்தார் ரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 272 மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தாரகேஸ்வரி கலந்துகொண்டு, 66 மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

முகாமில் மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர், திருமால், வெங்கடாஜலம் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News