செய்திகள்
கோப்புபடம்

சங்கரன்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-07-31 10:40 GMT   |   Update On 2020-07-31 10:40 GMT
சங்கரன்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 20). இவரும், அவருடைய தாய் சமாதானமும் குருவிகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

மகேந்திரவாடி அருகில் வந்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சமாதானம் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அய்யாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மோகன்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News