search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில் விபத்து"

    சங்கரன்கோவில் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைகன்னியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). டிரைவர். இவரது மகன் வினோத்குமார். இவர் கரிவலம்வந்த நல்லூர் பகுதியில் மினி பஸ் டிரைவராக உள்ளார். நேற்று பாலமுருகன் மகன் வினோத்குமாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பைக்கில் கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குவளைகன்னி விலக்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்குடன் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×