செய்திகள்
கைது

கார் மெக்கானிக்கை கத்தியால் குத்திய 3 பேர் கைது

Published On 2020-07-29 10:19 GMT   |   Update On 2020-07-29 10:19 GMT
சேந்தமங்கலம் அருகே கார் மெக்கானிக்கை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே இலக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 24). கார் மெக்கானிக். நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த இளவரசன் (21), திவாகர் (21), மிதுன் (19), லோகேஷ் (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே அங்கும் இங்கும் வேகமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். இதை குமரேசன் தட்டிக்கேட்டார். அப்போது இளவரசன், திவாகர் இருவரும் குமரேசனை கத்தியால் குத்தினர். மிதுன், லோகேஷ் குமரேசனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் நாமக்கல்லில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசன், திவாகர், மிதுனை கைது செய்தனர். லோகேசை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News