செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-07-29 08:48 GMT   |   Update On 2020-07-29 08:48 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரைக்கும் 3270 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். மேலும் 33 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று சிலரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,362 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News