செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
வெள்ளியணை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
வெள்ளியணை அருகே உள்ள ஓந்தாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று தாந்தோணிமலை சத்தியமூர்த்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் செந்தில்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.