செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-25 13:56 GMT   |   Update On 2020-07-25 14:09 GMT
கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி.(தி.மு.க.) உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி.(தி.மு.க.) உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ. மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைப்பு, விடுமுறை கழிப்புகளை கைவிட வேண்டும். ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போக்கு வரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News