செய்திகள்
அமைச்சர் எஸ்பி வேலுமணி

ரஜினிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் வேலுமணி

Published On 2020-07-23 05:16 GMT   |   Update On 2020-07-23 06:33 GMT
அரசின் நடவடிக்கையை பாராட்டிய நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

கந்த சஷ்டி கவசம் குறித்த அவதூறு வீடியோக்களை நீக்கி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே... கந்தனுக்கு அரோகரா...

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அரசின் நடவடிக்கையை பாராட்டிய நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள ரஜினிக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News