செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று : ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்

Published On 2020-07-19 10:41 GMT   |   Update On 2020-07-19 10:41 GMT
ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது
சாத்தூர்:

சாத்தூரில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து 4 வங்கிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊராட்சி பணி மேற்பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், மேலும் அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓட்டுனர் என அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவியது.

இதனைத் தொடர்ந்து நேற்று சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அதிகப்படியாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News